Wednesday, January 28, 2009

சாயம் வெளுத்துப் போன போலிகள்.




























சாயம் வெளுத்துப்போன போலிகள்
போர்ஜரி கம்யூனிஸ்டுகள்

ஒரு வேலைவிசயமாக திருப்பூர் வரை செல்லவேண்டும்,மாலை 4.30க்கு ரயில் சூப்பர் பாஸ்ட்.மணி , ஞாயிறு என்பதால் பேருந்தும் அதிகமில்லை ரொம்ப நேரம் காத்திருந்து ஏறினேன் .நகர பேருந்தில் கூட்டம் அதிகமில்லை . ஒரு சென்ட்ரல் கொடுங்க என்றேன் .ரொம்ப பொறுமையாக அவ்ர் இந்தாங்க என்ற படி சில்லரையை கொடுத்தார்.கூட்டம்  இல்லாதபோதுதான் அவர் முகத்தில் சிரிப்பும் சந்தோசமும் இருக்கும்.மிக விரைவாக வந்து சேர்ந்தது.வெளியே பலகை தெரிந்தது சென்னை சென்ட்ரல் . அப்படியே இறங்கி ரயில்வே நிலைத்துக்குள் சென்றேன்.கியூ ரொம்ப நீளமாக இருந்தது,அரை மணி நேரம் காத்திருந்து டிக்கெட்ட் ஐ வாங்கினேன் . நான் 2வது பிளாட்பாரம் செல்வதற்கும் ரயில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது..

 அப்பெட்டியில் நான் தான் முதல் ஆள் மற்ற நாளில் அன்ரிசர்வு பெட்டிகலில் ஏற வேண்டுமெனில் தற்காப்பு கலை தெரியமல் உள்ளேயே செல்ல முடியாது .இன்னும் அரை மணினேரம் இருக்கின்றது.  மெதுவாய் புத்தகத்தை  புரட்டிக்கொண்டிருந்தேன். சரியாய் 30 நிமிடம் ஆக  ரயில் கிளம்பியது.
எதிரில் ஒருவர் பொறியியல் புத்தகத்தை வைத்து கொண்டிருந்தார் ஒரு  கல்லூரியின் புரபசர் என்றார்.அவருக்கு அருகி சுமார் நாலு மலையாளிகள்.மற்றவர்கள் யாரென தெரியவில்லை.அந்த மலையாளிகள் தொன தொன என்று பேசிக்கொண்டே வந்தனர்.அவர்களின் பேச்சு கேரளாவை மிதமிஞ்சி புகழ்ந்து கொண்டே வந்தார்கள்.இந்தியத்தை தூக்கி வைத்து ஆடிக்கொண்டு வந்தார்கள் . அங்கு எல்லோரும் படித்த்வர்கள்,எல்லோரும் அறிவாளிகள்என்று, பேசுவது மலையாளமாக இருந்தாலும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.ரயில் கிளம்பி 1.30 மணி நேரம் ஆகிவிட்டது. என்னால் தாங்க முடியவில்லை ,களத்திலிறங்க முடிவு செய்து விட்டேன்.


அதிலே அதிகம் பேசிய நபரிடம் கேட்டேன் ” நீங்க பாலக்காடா ? இங்கேயிருந்து போவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்”, நாங்க பாலக்காடில்ல,திருவனந்தபுரம் எப்படியும் போக  8 அவர்ஸ் ஆகும். சம்பிரதாயமாக  சடங்கு கேள்விகளை கேட்டு இப்போது ஆரம்பித்தேன்.”ஆமா,னீங்க என்ன கட்சி  ஒருவர் ” நாங்கள் எல்லோரும்  CPM,ஒருவரை சுட்டிக்காட்டி இவர் தான்   டைபி நகரச்செயலாளர்”.”ரொம்ப வசதியாய் போச்சு என்ற படியே “கேரளாவுல கோக்குக்கு எதிரா - நீங்க தான போராட்டம் செஞ்சீங்க? “  ஆமாம் நாங்க தான்,  எப்பவுமே மக்களோட பிரச்சினைக்காக நாங்க தான் போராடுறோம்.அப்படியா  பிளாச்சிமடா வில போராடுனது  red flag ன்னு படிச்சேன். நீங்களோ மார்க்ஸிஸ்டுன்னு சொல்லுறீங்க.”இல்ல அவங்க மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் டெர்ரெர்ரிஸ்ட், நக்சலைட்ஸ்.”என்ன நக்சலைட்ன்னு சொல்லுறீங்கபோலீசு காரன் கிட்ட அடிவாங்கி மண்ட உடஞ்சு நிக்கறாங்க,உண்ணாவிரதமெல்லாம் இருக்காங்க.உலகத்திலேயே உண்ணாவிரதம் இருந்து அட்வாங்கி திருப்பி அடிக்காத பயங்க வாதி அவங்க தனோ” என்றேன்.அந்த  இரு வரிசையில் இருந்தவர்களும் விவாதத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள்.அத நானும் அவர்களும் உணர்ந்தனர்.உடனே அவர் ” நீங்க ரெட் பிளாக்கா?”என்றார்.  அதுவரை ரசித்த் ஆமோதித்த அருகிலிருந்தவர்களோ நான் தீவிரவாதியா என பார்க்க் ஆரம்பித்தார்கள்.

நான் ரெட் பிளாக் இல்லை அப்படியே இருந்தாலும்  சொல்லறதுக்கு எனக்கு தயக்கம் இல்லை.சொல்லுங்க உங்க மார்க்சிஸ்டு அரசாங்கத்தால் ஏன் கோக்கை தடை செய்ய முடியவில்ல? ” அது சென்ட்ரல் கையில் இருக்கு நாங்க என்ன செய்ய முடியும்.
“அப்படியா சரி  பெரியாறு பிரச்சினை என்னங்க? என்றேன். ஆக்சுவலா கேரளா மன்னருக்கு சொந்தமான இடம்  அங்கே தமிழ் தன்ணீ கேட் தொல்ல பண்ணறாங்க. கேரளா மன்னருக்கு சொந்தமான இடம்னா கேரளாவுக்கு சொந்தமானதா,அப்படீன்னாஒரு காலத்துல சேர மன்னன் கேரளாவை ஆண்டான்னு சொல்லுறாங்க,அதுக்காக கேரளாவை தமிழன் சொந்தம் கொண்டாட முடியுமா. (அப்போதுபு.ஜ வில் பெரியாறு சம்பந்தப்பட்ட கட்டுரை வந்திருந்தது) .கையிலிருந்த புத்த்கத்தை எடுத்து புள்ளி விவரத்தோடு பெரியாறு அணை குறித்து சொல்ல ஆரம்பித்தேன்.அவர் வாய் திறக்க முடியவில்லை.

அது சரி அணையோட நீர் மட்டத்தை உயர்த்தலாம்ன்னு  supreme court  சொன்ன பிறகும் உங்களால சட்டசபையில  சட்டம் போட்டு தடுக்க முடியுது? ஆனா 1 லி கோக் கழிவால 8 லி நல்ல  தண்ணீ பாதிக்கப்படுது,விளை நிலமெல்லாம் அழிஞ்சு போகுது அதை சட்டசபை கூட்டி தடுக்க முடியாதா? . அட ஆமா என்றார்கள்  பெட்டியிலிருந்தவர்கள்.  “டைபி கோக் பேக்டரிய உடைச்சதா பெருமை பட்டீங்கன்னா அதே டைபி தானே த்மிழ் நாட்டுக்கு தண்ணீ தரக்கூடாதுன்னு மறியல் செஞ்சங்க? அங்க ஒண்ணு பேசற்து,கர்னாடகாவுல தமிழகத்துக்கு  நீர் தரக்கூடாதுன்னு சொல்லறது.இங்கேயும் தண்ணீ கொடுன்னு போராடுறதுன்னா? நீங்க எல்லாம் ஒரே கட்சின்னு சொல்லிக்குறீங்க எதுக்கு இந்த பித்தலாட்டம்.இப்படி இனவெறியோட செயல் படுற முதல்வரை மார்க்சிஸ்டு தன் கட்சியிலிருந்து நீக்கியிருக்கணுமா வேண்டாமா? நீக்க மாட்டாங்க ஏனா அது  போர்ஜரி பார்ட்டி ஆப் இந்தியா.

” நீங்க சொல்றது சரி தான் நாமெல்லாம் இந்தியர்கள் மொழி இன பேதம் இருக்கக்கூடாது ஆமா நாங்க தப்புதான் பண்ணறோம்”வேறு வழியின்றி உண்மையை ஒத்துக்கொண்டார்”. நான் தீர்க்கமாய் சொன்னேன் “தோழர் லெனின் சொல்லியிருக்கின்றார் கம்யூனிஸ்டுக்கு நாடு மொழி எல்லை கிடையாது என்று  நீஙக்ள் பேரை மாற்றிக்கொள்ளுங்கள்”கம்யூனிசத்தை கேவலப்படுத்தாதீர்கள் என்றேன். அவரை தன் வாயாலேயே சொல்ல வைத்தேன்  போர்ஜரி கம்யூனிஸ்டு என்று.

இந்த விவாதத்தின் போது என்னுடன் பயணம் செய்த சுமார் 15 பேர் எனக்கு அதிகமாய் உதவினார்,பல ஆங்கில வார்த்தைகளை கல்லூரி பேராசிரியர் சொல்லிக்கொடுத்தார்.,சேலத்திலிருந்து திருப்பூர்  நான் செல்லும் வரை  அந்த நான்கு” தோல”ர்களும் வாய் திறக்கவேயில்லை.
—————————————————————————————————————————————————————————–

இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் இருக்கும் . அவரிடம் நான் கேட்ட கேள்விகளை விடுதலை,சந்திப்பு போன்ற போலிகளிடம் இப்போது  கேட்டால் கூட பதில் சொல்ல மாட்டார்கள்.அந்த ரயிலில் வந்த நால்வராவது கொஞ்சம் நாணயமாக அரசியல் பேசினார்கள் .இவர்களோ தன்னை அறிவாளி என்று கூறிக்கொள்கிறார்கள் . வினவோ,மற்ற தோழர்களோ கேட்ட கேள்விக்கு அரசியல்  ரீதியாக பதிலளிக்க திராணியற்ற்வர்கள் எழுப்பிய முழக்கம் தான் மருதையன் பார்ப்பனன் என்பது.பார்ப்பனன் என்று சொன்னதாலே மனம் புண்பட்டு சித்ம்பரத்தில் கழன்று கொண்டவர்கள் சொல்கிறார்கள் மருதையன் பார்ப்பனன் . இதற்கு ஏற்கனவே தோழர் பதில் சொல்லிவிட்டிருந்தாலும் நாமும் சொல்வோம்  “அவரின் நடைமுறை வாழ்வில் பார்ப்பனீயத்தை இம்மி அளவாவது காட்ட முடியுமா”.அவரின் பேச்சில் உள்ள பார்ப்பனீய எதிர்ப்பை எந்த சி.பி.எம் காரனின் பேச்சில் கேட்க முடியும்?.

கிடாவெட்டு தடை சட்டம்,சிறீ ரங்கம் கோயிலில்  நுழைதல் ,சிதம்பரம் கோயில் பிரச்சினை போன்ற பல போராட்டங்கள் பார்ப்பனீய எதிர்ப்பை பறை சாற்றியிருக்கின்றன.போலிகளின் பார்ப்ப்ன தலைமயோ என்ன சொல்கிறது ” நான் முதலில் பிராமணன் அப்புறம் கம்யூனிஸ்டு”.போலிகளில் இனியும் புரட்சிகர அணிகள் இருந்தார்கள் எனில் பதில் சொல்லுங்கள்”தூய்மையின் வடிவம் என்று இப்போது பாராட்டும் நிரூபன் சக்கரவர்த்தியை பைத்தியக்காரன் ஆக்கியது யார்?,” “எம்ஜிஆர் செயாவுக்கு தரகு வேல பார்ப்பதயே வேலையாக வைத்துக்கொண்டு திரிவது யார்” இந்த கேள்விகளுக்கு உங்கள் தலைமை கண்டிப்பாய் பதில் தராது, நாங்கள் சொல்கிறோம் ஏனெனில் அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள்.

வினவு,கலகம், உள்ளிட்டோரின்  கேள்விக்கு உங்கள் தலைமை சொல்லும் பதிலுக்கும் ஏதாவது சம்பந்தம்  இருக்கின்றதா? புரட்சி கர அமைப்புகளின்  முகவரிகளை அளித்த் பின்னும் எதற்கெடுத்தாலும் மறைமுகத்தலைமை என்று குற்றம் சாட்டிக்கொண்டு இருப்பது எதை காட்டுகின்றது? போலிகளில் உள்ள புரட்சிகரம் என சொல்லும் அணிகளே உங்களுக்கு அரசியல் சித்தாந்தத்தையும் அவர்கள் அளிக்கவில்லை என்பது தான் உண்மை.தனது பித்தலாட்ட கொள்கைகளை மறைக்க பயங்கரவாத பீதியூட்டுகிறார்கள். நீ£ங்களும் உடனே அமைதியாகிவிடுகிறீர்கள் இல்லையா. கடந்த வருடம் லயோலா கல்லூரியில் நடந்த எஸ் எப் ஐ  மா நாட்டில் சிவக்குமாரை  எதற்காக அழைத்தீர்கள் .R.S.S. கருத்துக்களை உமிழும் அவர் உங்களுக்கு தேனாய் இனிக்கிறார்.புத்த்ககண்காட்சியில் போய் பார்த்தீர்களா  மொட்டை சோவின் அல்லயன்ஸ் ல் கையெழுத்து போட்டு சீன் காட்டிக்கொண்டிருந்தார்.போலி விடுதலை சொன்னாரே
R.S.S.BJP ஐ நாங்கள் எதிர்க்கின்றோம் என்று எப்படி   சிவக்குமார்  உங்களுக்கும், R.S.S.க்கும் வேண்டப்பட்டவராயிருக்கிறார்.

போலிகளுக்கு  எதிராய் எழுந்த மாபெரும் நக்சல்பாரி எழுச்சியை  “வாதம்” என்று  அழைக்கின்றார்கள்.தோழர் ஸ்டாலினின் சோவியத்தை சிதைவுற்ற சோசலிசம் என்று  குறிப்பிடுகின்றார்கள்.ரணதிவேவோ தோழர் மாவோ அவர்களை போலி மருத்துவர் என்றார்.இந்த சீபிஎம் சீ பி ஐ போலிகளோ மந்திரம் போட்டே புரட்சியை சாதித்து விடு வார்கள் போலிருக்கின்றது.

சந்திப்பு தனது  தளத்தில் “மாமா வேலை செய்பவர்களுக்கு” என எழுதியிருக்கிறார்.அய்யா சந்திப்பு மாமா வேலை செய்வது யார்?


உங்களின் மாபெரும் தரகன் அரிகிஷன் சுர்ஜிட் செஇத காரியங்கள் என்ன? எப்போது பார்த்தாலும் செயாவின் தோட்டத்திலேயே வந்து கழுவிக்கொண்டிருந்தாரே அதை பற்றி என்ன எழுதுவீர்கள்  கூட்டணி வேந்தர் என்றா?  போலிகளின் இன்னொரு வாதம் எங்கல் பெயரை பயன்படுத்துகிறார்கள்.ஏன் சந்திப்பு உங்களை போல எங்களையும் முட்டாள் என நினைத்தீர்களா? சீபிஎம் பெர்ரை சொன்னாலே மக்கள் செருப்பை கழட்டும்போது அந்த பேரை யார்தான் சொல்வார்கள். ஆனால் ம க இ க வின் பாடல்களின் மெட்டை நீங்கள் பயன்படுத்துவது எல்லோருக்கும் தெரியும் .


கலகம் தயார் ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்பின் வேலைகளில் பார்ப்பனீயம் இல்லையென்றும் உங்கள் மாமா வேலைகளை பட்டியலிடவும் ,  நீ தயாரா? கருத்திலும் களத்திலும் உங்களைப்போன்ற போலிகளை ம க இ க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் எதிர் கொள்ளாமல் இல்லை.ஆனால் உங்களின் பரிணாம வளர்ச்சி எங்கு தான் போய் முடியும் என்பது தான் தெரியவில்லை.
பின்குறிப்பு : அந்த ரயிலில் வந்த நபர்களின் முகவரியோ கூட வந்தவர்களின் முகவரியோ தெரியாது. அந்த நாலு பேரின் முகவைரியை கொடு என்பார்கள் போலிகள்.


இதைதான் விவாதப் பொருளாய் மாற்றுவார்களே தவிர கண்டிப்பாய் நம் அரசியல் கேள்விகளுக்கு பதிலளிக்கமாட்டார்கள்


குறிப்பு: இப்பதிவும் படமும் தோழர் கலகம் அவர்களின் வலைதளத்திலிருந்து வெளியிடப்படுகிறது.



மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது.....


அன்பார்ந்த தோழர்களே!

பெயரில் மட்டும் கம்யூனிசத்தையும் மார்க்சியத்தையும் வைத்திருக்கும் போலி கம்யூனிச கட்சியான சி.பி.எம்., தேசிய இனப்பிரச்சினையில் இந்து-பார்ப்பனியக் கண்ணோட்டத்தையே கடைபிடித்துவருகிறது. பொதுவாக இப்போலிகளின் தேசியப் பார்வை என்பது இந்திய முதலாளித்துவ ஓட்டுப் பொறுக்கிக் கும்பலான இதர கட்சிகளைப் போன்றே இருந்துவருகிறது. இதனை அம்பலப்படுத்தும் விதமாகவும், சென்ற ஜனவரி’26 அன்று ”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்று வின்னதிர முழக்கமிட்ட புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தையும் விளக்கும் விதமாகவும் பதியப்பட்டிருக்கும் ஒரு கட்டுரையினை இங்கே பதிகிறேன்.

நட்புடன்,
-கலைவேந்தன்.

ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம்!
ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!


சனவரி 26-ம் நாள் மாபெரும் இந்திய சன நாயகம் துரோகத்தை தின்று மென்று  துரோகத்தை குடித்து 60 வயதினை கடந்துவிட்டது.களவாணி காங்கிரசு முதல் போலிகள்வரை குடியரசு தினத்தையோ சுதந்திரதினத்தையோ விமர்சித்ததேயில்லை. அது நாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே கருதப்பட்டது.தந்தை பெரியார் போலிசுதந்திரத்தை கடுமையாக எதிர்த்தார்.ஆனால் போலிகளோ இதுதான் உண்மைசுதந்திரம் என ஒத்து ஊதினர்.அவர்களின் ஒத்து ஊதல் இன்று வரை தொடர்கிறது.வடகிழக்கு மற்றும் காசுமீர் இனப்பிரச்சினையல் இந்திய தேசியத்தை பாதுகாத்தனர்,இசுலாமிய பயங்கரவாத தாக்குதலுக்கு மூலமான பார்ப்பனீயத்தை கண்டிக்காது பார்ப்பன செறிப்பிலே கழிவாகிப்போயினர்.பலரும் நினைக்கலாம் தேவையின்றி போலிகளை ஏன் விமர்சிக்கிறோம் என்று? ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது தேசிய இனப்பிரச்சினையின் போது எப்படியெல்லாம் நடந்து கொள்ளக்கூடாதோ அப்படியெல்லாம் நடந்து கொண்டு பாசிச அரசுக்கு வால் பிடித்து இன்று பாசிஸ்டாக பரிணாம வளர்ச்சியச்சியடைந்த போலிகள் இன்று தங்களை கம்யூனிஸ்டாக அறிமுகப்படுத்திகொண்டு திரிகிறார்கள்.


ஈழத்தமிழர் பிரச்சினையில் நடிகர்களின் கால்களை தேடி பாண்டி கம்பெனியோ நாக்கை சுழட்டுகிறார்கள்.முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் சீர்கெட்டு “டவுசர் கிழிந்து” போயிருக்கும் சூழலில் மக்களுக்கான சரியானதலைமையாக புரட்சிகர அமைப்புக்களே உள்ளன.  கம்யூனிசம் சாகாது அது மக்களின் உழைப்பு ,உயிர்,அப்படி  கம்யூனிசப்பாதையில் செல்லும் புரட்சிக அமைப்புகளான ம க இ க , பு ஜ தொ மு, பு மா இ மு,பெ வி மு, ஆகியவை  போலிகுடியரசு நாளன்று ஈழமக்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசின் பங்காளியான  இந்தியாவை கண்டித்து  நடத்திய ஆர்ப்பாட்டத்தில் நடந்த சில  இங்கே ,கண்டிப்பாக  பதிக்கப்படவேண்டும். நாளைய வரலாறு உழைக்கும் மக்களால் எழுதப்படும். ஏனெனில் வாய்ச்சொல்வீரர்களான தமிழ்ப்பூச்சாண்டிகள் பலரும் பம்மிப்பதுங்கிய இவ்வேளையில் புரட்சிக அமைப்புகளும் பெரியார்திக போன்ற சில அமைப்புக்கள் மட்டுமே இந்திய தேசியத்தை அம்பலப்படுத்தினர். 


போலிகம்யூனிஸ்டில் உள்ள தரகர்கள் சாகும் போது இந்திய சுதந்திர போராட்ட வீரர் என்றே குறிக்கிறார்கள்.இப்படி மற்ற ஓட்டு பொறுக்கிகள் போலவே இந்திய அரசின் கைக்கூலிகளாகவே செயல் படும் போலிகம்யூனிஸ்டுகளை வீழ்த்தாது உழைக்கும் மக்கள் தங்கள் அதிகாரத்தை பறித்தெடுக்க முடியாது என்பதுதான் உண்மை. இந்த பாசிச அரசினை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல வீழ்த்துவது புரட்சிகர அமைப்புகளாலே மட்டுமே சாத்தியம். முதுகெலும்பில்லாத கருணாநிதிக்கு முதுகில் வலி வந்து ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,மண்மோகனுக்கு  இதய அடைப்பு ஆப்ரேசன் செய்யப்பட்டதும்,பார்ப்பன பன்னாடைகள் இழவு செய்திகள் தான்  தலைப்பு செய்திகளில் வருமே தவிர உழைக்கும் மக்களின் போராட்டம்  தலைப்பு செய்திகளில் மிளிராது என்பது தான் உண்மை. குடியரசு நாளில் செங்கொடிகளால் கிழிக்கப்பட்ட  தேசியத்தை அச்சம்பவத்தை   நேரில் கண்டவர் என்ற முறையில்  பெருமையோடு   பதிக்கிறோம்.


சனவரி-26,காலையில் பனகல் பார்க் நோக்கி புறப்பட்டோம்.25-ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு  மாநாடு மக்களை தின்னும் முதலாளிகளை அம்பலப்படுத்தியும்  ,அவர்தம் காலில் கிடக்கும்ஐடி அடிமைகளை தொழிலாளியாக மாறக்கோரியும் முழங்கின புரட்சிக அமைப்புக்கள். அடுத்த நாள் ஈழத்தமிழரை கொல்லும் இந்தியஅரசை முறியடிக்ககோரி ஆர்ப்பாட்டம் செய்வதாய் சுவரொட்டிகள் மூலம் 26-ம் தேதி  காலை அறிவித்தன. எங்கள் பகுதியிலிருந்து செல்லும் வழியில் குடியரசின் மாண்பினை தவறாமல் மிட்டாய்கள் மூலமும்,சர்க்கரை பொங்கல் மூலமும் சிலர் நிரூபித்தனர். சாலையில்  வருவோர் போவோரை எல்லாம் கூப்பிட்டு தந்து கொண்டிருந்தனர். சட்டையில்லாத குழந்தைகள் முண்டியடித்து நின்றனர்.அவர்களுக்கு தெரியவில்லை நாம் இப்படி நிற்பதற்கும் அதனை நீட்டிப்பதற்கும் தான் குடியசு தினம் கொண்டாடப்படுகிறதென்று.

 

 

ரயிலைப்பிடித்தோம் சைதாப்பேட்டை செல்வதற்காக, எங்களோடு  பயணித்த தின்று கொழுத்த ஊளைச்சதைகள்,அரைகுறை ஆடையோடு  வழக்கம்போல மேய்வதற்காக தேவையான இடம்  நோக்கி சென்று கொண்டிருந்தனர்,மார்பில் தேசியக்கொடியை குத்தியபடி, ஸ்ட்டெசனில் இறங்கினால் கண்ணில் பட்ட பலரும்  தனது தேசபக்த்தியை பறை சாற்றிக்கொண்டிருந்தனர். பனகல் பார்க்குக்கு சென்றோம்.தோழர்கள் வரிசையாய் நிற்க அரை மணி நேரத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது ஆயிரக்கணக்கான போராளிகள் முழக்கமிட்டார்கள் அரசி எதிர்த்து.முழக்கங்கள் தோழர் மருதையன் குரலில்  வெடியாக வெடித்தன.”ஈழத்தில் நடக்குது கொலைவெறியாட்டம் இங்கே என்ன குடியரசு கொண்டாட்டம்” என்ற கேள்வி உண்மையான இந்தியபற்று வைத்திருக்கும் எவரையும் உலுக்கும் ஆனால் காதில் கேட்காதவாறு ஐடி அடிமைகள் பீபீஓ தொண்டுகளும் 19B க்காக காத்திருந்தனர்,தோழர்கள் பலரிடமும் நோட்டீசுகளை கொடுத்தனர்.படித்த மேதாவிகளும் ஐடி அட்மைகள் சிலரும் வான்கிய நோடீசைன் தலைப்பை பார்த்தவுடன் கீழேப்போட்டன.தன்வாழ்க்கையை தவற விட்டவன் ஈழத்தமிழன் உயிரைபற்றி கவலைப்படுவான் என எதிர்பாப்பது கூட தவறுதான் போலும்.

“இலங்கையில் அடிக்கடி மூக்க நுழக்குற ராஜீவு குப்புற கிடந்தத மறந்து போகுறே” என்ற தோழர்களின் பாடல் காங்கிரசு களவாணிகளை அம்பலப்படுத்திய பாடலை பலரும் தங்கள் பேருந்துகளை விட்டுவிட்டுகூட கேட்டனர்.

 

 பத்துக்கும் மேற்பட்ட காவல் வண்டிகள் மூலம் தோழர்களை கைது செய்த்தது காவல் துறை.கடைசி தோழர் ஏறும் வரை முழக்கங்கள் தொடர்ந்து எதிரெலித்தது.


கடைசியால் சென்னை பெ வி மு தோழர்கள்  இந்திய அரசை எதிர்த்து முழங்கினார்கள்.ஒரு தோழர் தன் கைகுழந்தையோடு வண்டியிலேறினார்.என்னருகில் நின்றிருந்த போலீசு அதிகாரி சக காவலரை பார்த்து சொன்னார்”இந்த வயசிலேயே ஜெயிலுக்கு போவுது பாத்தியா ?அந்தக்குழந்தயோட  பார்வை எப்படி இருக்கப்போவுது பாரு?”

ஆம் அந்த புரட்சித்தாய் தன் குழந்தையோடு  புரட்சிகர வாழ்வில் பயணிக்கிறார்.அவர்களின் பார்வை எப்போதும் மக்களுக்கானதாகவே இருக்கும். பெண் தோழர்களின் முழக்கங்கள் அதிர்ந்து கொண்டே இருந்தன.

 

அதற்கு பதிலளிக்காது காவலர் சொன்னார் ” பெண்களோட வேகத்த பாத்தா இவங்களுக்குன்னே 2025ல தனி forceபோடனும் போல இருக்கு”

 

இன்னும் எத்தனை படைகள் வந்தாலும் புரட்சியாளர்கள் சோர்ந்து விடப்போவதில்லை.பீனிக்ஸ் பறவையாய் வீறு கொண்டு எழுவார்கள் போரிடுவார்கள் மக்களுக்காக,

 

அம்முழக்கங்களால்  எக்கட்டிடமும் அசையவில்லை.துரோகத்தை மொத்தமாய் குத்தகை எடுத்த இவ்வரசின் கட்டிடங்கள்  உடைபடுவதற்கு கலகக்குரல்களின் எண்ணிக்கை ஆயிரமல்ல லட்ச,கோடிகளாக பெருகவேண்டும்,இன்னும் நாம் பார்வையாளராகவே இருந்தால் ஈழத்தில் மட்டுலல்ல இங்கேயும் தமிழினம் மொத்தமாய் அழிக்கப்படும்.ஒப்பாரிகளோ ஈழத்தமிழனின் கதறல்களை பார்த்து கண்ணை கசக்குவது மட்டும் பலன் தராது, ஈழத்தில் போரினை நடத்திக்கொண்டு இரூக்கும் இந்திய அரசினை எதிர்க்காத நமது கண்ணீர்  செத்துக்கொண்டிருக்கும் அம்மக்களை சுட்டெரிக்கவே துணை போகும்.


நன்றி: தமிழரங்கம் இணைய தளம்.

 


 


ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்…


அன்பார்ந்த தோழர்களே!

தலைமையின் தொடர்ச்சியான துரோகங்களும், அதனையும் மீறிய அணிகளின் தியாகங்களும் நிரம்பியதுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறு. வீரத் தெலுங்கானா போராட்டம் முதல் பாசிச இந்திராவின் அடக்குமுறையாட்டம், நக்சல்பரி, சமீபத்திய சிங்கூர், நந்திகிராம் வரை இந்திய கம்யூனிச இயக்கம் தனது போலித்தனத்தைப் பறைசாற்றியே வருகிறது.

முதலாளித்துவக் கட்சிகளுடனும், டாட்டா,சலீம் போன்ற இந்திய-அந்நிய தரகு முதலாளிகளுடனும் எந்த விதமான சமரசத்திற்கும் தயாராக இருக்கும் இக்கும்பல் வரலாறு நெடுகிலும் இதுபோன்ற புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகளிலேயே இயங்கிவந்துள்ளது.

நக்சல்பரி எழுச்சியின் போது போலிஸ்துறையைக் கையில் வைத்திருந்த நம்ம மூத்த ‘காம்ரேடு’ ஜோதிபாசு அவர்கள்தான் தமது சொந்த கட்சியினைச் சார்ந்த தோழர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். அதன் எச்ச-சொச்சங்கள்தான் இப்போதும் நந்திகிராமத்தில் தனது அரசை எதிர்க்கும் நபர்கள் யாராக இருந்தாலும் ‘நக்சல்கள்’ என்று முத்திரைகுத்தி தனது குண்டர்களை ஏவிவிட்டு பழிதீர்த்துக் கொள்கிறது. இதனை நாம் வலது சந்தர்ப்ப வாதம் என்று வரையறுக்கிறோம்.

இந்திய மாவோயிஸ்டுகள் குறித்து பேச வேண்டுமென்றால், தமது இடது தீவிரவாத செயல்தந்திரத்தை அவர்கள் பரிசீலிக்கவும் தயாராகாத் நிலையில்தான் இருந்து வருகின்றனர். இதனை விளக்கும் விதமாக தோழர் ஒருவர் தனது சூன்யம் என்கிற வலைதளத்தில் பதிந்துள்ள கட்டுரை ஒன்றினை இங்கே பதிவிடுகிறேன் (அனுமதி பெறாமலேயே....).

போலி கம்யூனிஸ்டுகள் எமது அமைப்பின் பெயரிலேயே ஒரு வலைதளத்தைத் தொடங்கி அவதூறூகளை நிரப்பி வருகின்ற சூழலில் இக்கட்டுரையினை இங்கே பதிவிடுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

நட்புடன்,
- கலைவேந்தன்.

சாரு மஜூம்தாரின் எட்டு ஆவணங்கள் (1965 - 67)

ஜனவரி 27, 2009

சாரு மஜூம்தார்… இது ஒரு தனிப்பட்ட நபரின் பெயர் மட்டுமேஅல்லஇந்தப் பெயருக்கு பின்னால் பல விஷயங்கள்அடங்கியிருக்கின்றனஇந்தப் பெயர் உணர்த்தும் வரலாறும்,எழுச்சியும் சாதாரணமானவை அல்லஅதிகாரத்துக்கு எதிரானகுரலாகவும்தன்மானம் - சுயமரியாதைக்கு அர்த்தமாகவும்,உரிமையை நிலைநாட்ட போராடும் உத்வேகத்தையும்அளிக்கும் வார்த்தையாக இந்தப் பெயர்தான் இருக்கிறது.சொல்லப்போனால் இந்தப் பெயருக்கு பின்னால்தான் இந்தநாட்டின் புரட்சியே அடங்கியிருக்கிறது.

நக்சல்பாரி - என ஆளும்வர்க்கமும்பன்னாட்டு முதலாளிகளும்இன்று மட்டுமல்லஇனி எத்தனை நூற்றாண்டுகளானாலும்பயத்துடன் உச்சரிக்கப் போகிறார்களே… அந்த ‘நக்சல்பாரிஎன்ற சொல்லுக்கு பின்னால் நிற்கும்இருக்கும் மனிதர்இந்தசாரு மஜூம்தார்.

1968ம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் ஐக்கிய முன்னணியின் கூட்டணி அரசில் கம்யூனிஸ்டுகளும் இடம் பெற்றிருந்த போது டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நக்சல்பாரி என்னும் கிராமத்திலிருந்து ஒரு குரல் சீறி வெடித்ததுஅந்தக் குரல் சாருமஜூம்தாருடையது. கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாம் மட்ட தலைவராக இருந்த இவரது குரலை அவரது கட்சியே எதிர்பார்க்கவில்லை. பணக்காரர்களிடம் இருக்கும் நிலங்களைப் பிடுங்கி ஏழைகளுக்கு பங்கிட்டுக் கொடுக்க வேண்டும். விவாசாயிகளே நேரடி நடவடிக்கையில் ஈடு பட்டு தங்களின் நிலத்தை பணக்காரர்களிடம் இருந்து எடுத்துக் கொள்வார்கள்… என அதிரடியாக சாரு அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு ஏற்பட்டது.

சரிஅழித்தொழிப்பு நடவடிக்கையில் சாரு மஜூம்தார் ஏன்இறங்கினார்இப்படியொரு முடிவுக்கு அவர் வர என்னகாரணம்?

1967 மார்ச் 2ம் தேதி. அதே நக்சல்பாரி கிராமம். அங்குதான் விமல் கேசன் என்ற ஆதிவாசி இளைஞர் வசித்து வந்தார். தனது நிலத்தை விமல் கேசன் உழுவதற்கு அந்தப்பிரதேச நீதித்துறை அனுமதி வழங்கியது. ஆனால், அந்தக்கிராம நிலச்சுவாந்தர்கள், நில உரிமையாளர்கள், விமல் கேசனை தனது நிலத்தில் உழுவதற்கும், உரிமை பாராட்டவும் அனுமதிக்காமல் அவரை அடித்துத் துன்புறுத்தினர்.

இதைப் பார்த்து ஆதிவாசிகளும் விவசாயிகளும் கொதித்து எழுந்தார்கள். ஏற்கனவே அங்கு புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த சாரு மஜும்தார், தீவிரமான ஒரு கிளர்ச்சிக்கு தயாரானார். அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட நக்சல்பாரி மக்கள் கிளர்ந்தெழுந்தனர். விமல் கேசனுடைய நிலத்தை மட்டுமல்ல, தாங்கள் பறிகொடுத்த அனைத்து நிலங்களையும் சாரு மஜும்தாரின் தலைமையில் நக்சல்பாரி மக்கள் மீட்டெடுத்தனர்.

கிளர்ச்சி 72 நாட்கள் தொடர்ந்தது. ஒரு சப் இன்ஸ்பெக்டர், ஒன்பது விவசாயிகள் அல்லது ஆதிவாசிகள் இந்தக் கிளர்ச்சியின் போது கொல்லப்பட்டனர். நக்சல்பாரி மக்களின் அந்தக் கிளர்ச்சியே பின்னாட்களில் நிலச்சுவாந்தர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கும் தத்துவங்களுக்கும் பெயராகவும் அமைந்தது.

இப்படித்தான் ‘வசந்தத்தின் இடிமுழக்கம்‘ தோன்றியது.

ரஷ்யப் புரட்சியாளர் லெனினின் பிறந்த நாளான ஏப்ரல் 22ம் தேதிகல்கத்தவில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் நீண்ட காலமக்கள் யுத்தத்தை பிரகடனப்படுத்தி மார்க்ஸ்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சியை சாரு மஜூம்தார் தொடங்கிஇன்றுடன்40 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன.

அவரது தலைமையின் கீழ் தமிழகத்திலும் புரட்சிகர மா - லெ குழு தோன்றியது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியையும், தடங்களையும் அவ்வளவு சுலபத்தில் யாராலும் மறக்கவோ, மறைக்கவோ முடியாது.

சாருமஜூம்தார் தமிழகத்துக்கு 2வது முறையாக வந்துஅழித்தொழிப்பு நடவடிக்கையில் துரிதம் தேவை என அறிவித்தபிறகு பரவலாக பலர் அழிதொழிக்கப்படகட்சியின் மத்தியக்குழு உறுப்பினராக இருந்த தோழர் அப்பு காவல்துறையினரால்வேட்டையாடப்பட்டார்நக்சல்பாரிகள் சந்தித்த முதல் இழப்பும்இட்டு நிரப்ப முடியாத பேரிழப்பும் அதுதான்தோழர்கோதண்டராமன் போன்ற பக்குவம் மிக்க தலைவர்கள்சாருமஜூம்தாரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தங்கள் வேலையைவிட்டுவிட்டு கிராமங்களுக்கு சென்றார்கள்.

அதுவும் எப்படிப்பட்ட வேலைதொழிற்சங்கத்தின் ஆணிவேராகஅல்லவா தோழர் கோதண்டராமன் விளங்கினார்?தொழிற்சங்கத்தை கட்டுவது எளிதான விஷயமல்லஎன்பதுஅமைப்பை கட்டுபவர்களுக்கு தெரியும்அப்படி கட்டி எழுப்பியசங்கத்தை அப்படியே போட்டுவிட்டு தலைமறைவுவாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்பின்னர்காவல்துறையினரால்கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்அன்று மட்டும் அவர் அழித்தொழிப்பு செயலில் இறங்காமல்,தன்னிடமிருந்த தொழிற்சங்கத்தை வைத்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால்..? பரவசமான கனவுதான்.ஆனால்நடக்காமலேயே போய்விட்டதுஅவரால் கட்டப்பட்ட தொழிற்சங்க அமைப்பை அதன்பின், வலது - இடது போலி கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி சின்னாபின்னமாக்கிவிட்டார்கள்.சரிஅது முடிந்த கதைதமிழக நக்சல் தடத்துக்கு வருவோம்.

தோழர் அப்புவை தொடர்ந்து சீராளன்பாலன்கோவிந்தன்,கண்ணாமணி போன்றோர் அடுத்தடுத்து போலீஸ் மோதலில்பலியாகி விழுந்தார்கள்எம்.ஜி.ஆர்ஆட்சிக்காலத்தில்காவல்துறை அதிகாரியான தேவாரம் தலைமையில்நக்சல்பாரிகள் நரவேட்டையாடப்பட்டார்கள்இதில்புரட்சியாளர்களைவிடபல அப்பாவி பொதுமக்கள்தான்பலியானார்கள். பிடிபட்ட புரட்சியாளர்கள் காவல்நிலையத்தில் சந்தித்த கொடுமைகளை எழுத்தில் வடிக்க முடியாது. ரத்தத்தில் தோய்ந்த வரலாறு அது.

தமிழ் புதின உலகில், இந்தி எதிர்ப்பு வரலாற்றை போலவே இந்த நக்சல்பாரி எழுச்சியும் இரட்டடிப்பு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் என்ன, என்றுமே அழியாதபடி மக்களின் மனதில் தங்கிவிட்டது. இன்றும் தர்மபுரி, வடாற்காடு மாவட்ட கிராமங்களுக்கு சென்றால் வாய்மொழி கதைகளாக அவ்வளவு நிகழ்வுகளை கேட்டறியலாம்.

இப்படியான கொந்தளிப்பும், அடக்குமுறையும் ஆளும்வர்க்கத்தினரால் கட்டவிழ்க்கப்பட்ட சூழலில், நக்சல்பாரி இயக்கத்தைத் தொடங்கிய சாருமஜூம்தார், 1972ம் ஆண்டு காவல்துறை மோதலில் கொல்லப்பட்டார். அவருடன் நக்சல்பாரி இயக்கம் முடிவுக்கு வந்துவிட்டதாக ஆளும் வர்க்கம் ஆனந்தக் கூத்தாடியது. ஆனால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு இதன் பிறகுதான் நடந்தது என்பது அப்போதும் சரி, இப்போதும் சரி அது அறியவில்லை. கிள்ளுக்கீரையாக நக்சல்பாரிகளை பிடுங்கிவிடலாம் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கிறது. ஆனால், பிடுங்கி எறியவும், வெட்டிப் போடவும் நக்சல்பாரிகள் ஒன்றும் கோழைகள் அல்லவே. அவர்கள் போராளிகள். இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் சரி, சமூக மாறுதல் ஏற்படும் வரை, சோஷலிசம் உருவாகும் வரை இந்த நக்சல்பாரி விதை முளைத்து கிளை பரப்பிக் கொண்டேதான் இருக்கும்.

மார்க்ஸிய - லெனினிய கொள்கையே புரட்சிக்கான வழி. அதில் எப்போதுமே யாருக்குமே மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதற்கான வழிமுறைகளில் மாற்றம் தேவை என்ற சுய பரிசீலனைக்கு, சாரு மஜூம்தாரின் மறைவுக்கு பிறகு, மா - லெ குழுக்கள் வந்தன. அதனால்தான் அவரது அழித்தொழிப்பு கொள்கைக்கும் கட்சியின் சித்தாந்தத்துக்கும் போர் தொடங்கியது.

‘நீங்கள் கிராமங்களுக்கு செல்கிறீர்கள். விவசாயக் கூலிகளோடு இணைந்து பணி செய்து ரகசியக் குழு அமைத்து விவசாயக் கூலிகளின் உதவியோடு பண்ணையாகளை கொல்கிறீர்கள். பின்னர் அந்த கூலி விவசாயிகளை கட்சியில் இணைந்து கொண்டு தலைமறைவாகி விடுகிறீர்கள். நீங்கள் எப்படி உங்கள் குடும்பங்களைத் துறந்து புரட்சிக்காக கிராமங்களுக்கு வந்தீர்களோ, அப்படியே அந்த விவாசயக்கூலிகளும் குடும்பங்களை நிராதரவாக விட்டு விட்டு உங்களுடன் வந்து விடுகிறார்கள். முன்னணி தோழர்கள் கொல்லப்படுகிறார்கள். இது புரட்சிக்கு ஏற்பட்ட மிக மோசமான பின்னடைவு. ஆயுதங்களிலிருந்து அதிகாரம்தான் பிறக்கிறது, சித்தாந்தமல்ல. மக்களை திரட்டி அவர்களின் ஒத்துழைப்போடு நடத்தப்படுவதுதான் புதிய ஜனநாயக் புரட்சியாக இருக்கும்…’

என நக்சல்பாரி அமைப்பின் அனுபவங்களோடு எஸ்..சிஎன்றழைக்கப்படும் மார்க்ஸிய - லெனினிய சித்தாந்தஅடிப்படையிலான மாநில அமைப்புக் கமிட்டியைநிறுவினார்கள்ஆயுதங்களை சுமந்து திரியும்சாகசவாதங்களை நம்பாமல் இவர்கள் கிராமங்களுக்குப் போய்மக்களை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரட்டஆரம்பித்தார்கள்அணி திரட்டியும் வருகிறார்கள். மகஇக இந்த வழிமுறையுடன்தான் (நான் அப்படித்தான் நம்புகிறேன் - சூன்யம்) வீறுநடை போடுகிறது.

என்றாலும் தோழர் சாரு மஜூம்தார் என்றுமே மரியாதைக்கு உரியவர். அப்படிப்பட்டவரின் புகழ்பெற்ற எட்டு ஆவணங்களை ‘மனிதன்’ பதிப்பகம் தமிழில் கொண்டு வந்திருக்கிறது.

இந்த ஆவணங்கள் இன்றும் பொருந்தக் கூடியதா என்ற கேள்விஎழுவது இயல்பானதுதான்ஆனால்என்றைக்குமே ஒருவரலாற்று கட்டத்தில் முன்வைக்கப்படும் ஆவணங்கள் எல்லாக்காலத்துக்கும் எப்போதும் பொருந்தும் என்று யாராலும் கூறமுடியாதுஇதை நினைவில் கொள்வது நல்லது. இன்று புரட்சிகரஅணிகளில் பல பரிணாம வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.ஆயினும் ந்த ஆவணங்களிலுள்ள சில விஷயங்கள் இன்றும்பொருந்தும் என்றே தோன்றுகிறது.

உதாரணாமாகஇந்தியா ஒரு அரைக்காலனிய - அரைநிலவுடமை நாடு என்ற வரையறுப்பும்இதுபோன்ற நாடுகளில்பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தொழிலாளர்கள் -விவசாயிகள் கூட்டை அடிப்படையாகக் கொண்ட மக்கள்ஜனநாயகப் புரட்சியே சாத்தியம் என்ற துணிபும்அது நீண்டகால மக்கள் யுத்தப் பாதையின் மூலம் நிறைவேற்றப்படும்என்ற வழிகாட்டலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதே.

அதேபோல் இந்திய அரசமைப்பு மேலும் மேலும்பாசிசமயமாக்கப்பட்டு வரும் சூழலில்சமுதாய மாற்றத்துக்குதலைமை தாங்க வேண்டிய கட்சி ரகசியமாக செயல்படுவதுஇன்றியமையாததாகும்அந்தவகையில் ரகசிய கட்சியின்அவசியத்தை வலியுறுத்திய சாரு மஜூம்தாரின் கருத்துஇன்றைக்கும் பொருந்தும் அல்லவா?

நக்சல்பாரிகள் தங்களை தாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளவும், வரலாற்றிலிருந்து கற்றுக் கொள்ளவும் இந்த ஆவணங்கள் பயன்படும்.

‘வரலாற்று முக்கியத்துவமிக்க எட்டு ஆவணங்கள் (1965 - 67)’, சாரு மஜூம்தார், மனிதன் பதிப்பகம், வரகூர், அண்ணாமலைநகர், சிதம்பரம் - 608002.பக்கம்: 96, விலை: ரூ: 50



Wednesday, January 21, 2009

அவதூறு நாயகன் 'செல்வப் பெருமாளுக்கு' (சந்திப்பு) அசுரனின் பதிலடி......

தோழர்களே! நண்பர்களே!!

பார்ப்பன பயங்கரவாதிகளின் தலைவனான ஜெயேந்திரன் கைதைக் கண்டித்த சீத்தாராம் யெச்சூரி, இச்செய்தி அம்பலமாகி கட்சி உறுப்பினர்களிடையே கடும் எதிர்ப்பைச் சந்தித்தபோது முழுப்பூசணிக்காயையும் சோற்றில் மறைத்த கதையாக “அவர் அப்படி சொல்லவேயில்லை” என்று தமது தீக்கதிரில் எழுதித் திரித்து மேலும் அம்பலமாகிப் போனது.

அதே போல நந்திகிராமத்தில் இவர்கள் கட்சியின் குண்டர்கள் கூட்டம் அங்குள்ள உழைப்பாளி மக்களுக்கு, ஏழை விவசாயிகளுக்குச் செய்த மாபாதகச் செயல்களை யார் அம்பலப்படுத்தி கேள்வியெழுப்பினாலும், அவர்கள் அனைவருக்கும் ’நக்சல்’ பட்டத்தையும், ‘முதலாளித்துவ கைக்கூலிகள்’ என்கிற பட்டத்தையும் சுமத்தி, தமது குற்றநடவடிக்கைகளை நியாயப்படுத்தியது. 

நந்திகிராமத்தைப் பார்வையிடச் சென்ற இந்துவெறியன் அத்வானி தம்மை எட்டிக் கூட பார்க்காமல் சென்றுவிட்டதாகக் கண்ணீர் வடித்தான் சி.பி.எம். கட்சியின் மேற்குவங்க முதல்வர் புத்ததேபு பட்டாச்சார்ச்சீ...! ஆனால் அதே நந்திகிராமத்தை மேதா பட்கர் என்ற வயது முதிர்ந்த பெண்மணி பார்வையிட வந்தபோது அவரை அடித்து துரத்தியது சிபிஎம் கட்சியின் ரவுடிக் கும்பல். அத்வானியிடம் பொங்கிப் பிரவாகமெடுத்த இவர்களது ‘இனப்’பாசம் மேதாபட்கரிடத்தில் வெறிநாயாய்ச் சீற்றமெடுத்தது எப்படி?

ஒப்பீட்டளவில் இன்னும் வளராத நிலைதான் தமிழக சிபிஎம்மின் நிலை. இந்நிலையிலேயே காரப்பட்டில் எமது தோழ்ர்களைக் கொலை செய்ததும், பல்லாவரத்தில் எமது தோழர்களைத் தாக்கியும், தமுஎச கூட்டத்தில் எமது தோழர் கையிலிருந்த புத்தகங்களை, துண்டுப் பிரசுரங்களைப் பிடுங்கி தீக்கிரையாக்கியதும் இன்னும் இன்னும் இக்கட்சியின் குண்டர்களின் பொறுக்கித்தனங்கள் தொடருகின்றன என்றால்; முப்பது வருடங்களுக்கும் மேலாக தமது கட்சி ஆட்சியிலிருக்கும் மாநிலமான மேற்கு வங்கத்தின் நிலைமையை எண்ணிப்பார்த்தாலே அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை நாம் எளிதில் யூகிக்க முடிகிறது.

இந்த அளவுக்குச் சீரழிந்து தமது இருத்தலைக் காத்துக் கொள்வதற்கே ஆளாய்ப்பறந்து திரியும் நிலைக்கு அவர்களை மாற்றியது எது? கீழ் கண்ட தோழர் ஏகலைவனின் தளத்தில் வெளியான பதிவில் தோழர் அசுரன் இவர்களது அரசியல் கேவலங்களை முன்னேறிய சித்தாந்தத்தைக் கொண்டு அடித்து துவைக்கிறார். பாருங்கள் தோழர்களே! உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் தோழர்களே!

தோழமையுடன்,
- கலைவேந்தன்.

 

அவதூறு நாயகன் 'செல்வப் பெருமாளுக்கு' (சந்திப்பு) அசுரனின் பதிலடி......

அவதூறு நாயகன் 'செல்வப் பெருமாளுக்கு' (சந்திப்பு) அசுரனின் பதிலடி......










சந்திப்பு அல்லது அவரது தளத்தில் எழுதும் CPM நபர் முதல் முறையாக ஒரு சின்ன முயற்சி செய்துள்ளனர் பாராட்டுக்கள். அதற்கான நமது எதிர்வினை.

//சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை சோசலிசத்திற்கான இந்தியப் பாதை என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்....//

//சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை.//

மேலேயுள்ள ம க இகவின் கருத்திற்கு மறுப்பு எழுதியுள்ள CPM நபர் இவை CPMன் கட்சித்திட்டத்தில் இல்லையென்கிறார். நல்லது, CPMண் கட்சித்திட்டத்தில் நந்திகிராம்கள், சிங்கூர்கள் எல்லாம் உள்ளதா என்று பார்த்துச் சொல்லிவிட்டால் நமது வேலை மிச்சம். ஏனேனில் தோழர்கள் CPM கட்சியின் நடைமுறையைவிட அதன் கட்சித்திட்டத்தையே CPMஆக கருதுகிறார்கள் என்று தெரிகீறது. எப்படி பெயரில் மட்டும் மார்க்ஸிஸ்டு உள்ளதோ அதே போல கட்சிதிட்டத்திலும் மார்க்ஸியத்தை தழுவி ஏதாவது இருப்பதே இவர்களுக்கு போதுமானது. CPM போன்ற கட்சிகள் சமாதான நாடாளுமன்ற பாதையை காட்டுவதாகத்தான் கூறியுள்ளனர்.

//இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை!//

CPMன் பாதையில் சங்கராச்சாரியார் CPMன் நட்பு நந்திகிராம், சிங்கூர் மக்கள் எதிரி. எனில் மார்க்ஸியம் பேசிக் கொண்டு சந்த்ரப்பவாத நடைமுறை கொண்ட இவர்கள்தான் வர்க்கமற்ற அரசியல் செய்கிறார்கள். ஏனேனில் இவர்களின் நடவடிக்கையை தீர்மானிப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமே. சந்தர்ப்பவாதம் என்பது வர்க்க அரசியல் அல்ல. நாடாளுமன்ற பாதையின் புனிதம் காக்கும் சோம்நாத் சாட்டார்ஜியே இவர்களின் நாடாளுமன்ற பாதைக்கு சாட்சி.

//முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்//

மேலேயுள்ள லெனினின் கூற்றை யாரும் மறுக்கவில்லை. இதுதான் நேபாள மாவொயிஸ்டுகளின் நிலைப்பாட்டை நாம் ஆதரிக்க உதவுகிறது. சரி இந்தியாவுக்கு இது பொருந்துமா என்பது குறித்து அந்த சந்திப்பு தளத்தின் CPM நபர் விளக்குவாரா? இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றத்தை கொண்டுள்ளதா?

உலக வங்கி, பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைகளை நிறைவேற்றும் ஒரு அரட்டை மடம் என்பதை தாண்டி அதில் ஜனநாயகம் என்ற அம்சத்தில் எதுவுமே இல்லை என்கிற போது அதனை எந்த அர்த்தத்தில் முதலாளித்துவ பாராளுமன்றத்துடன் ஒப்பிடுகிறார்கள்? குறைந்த பட்சம் இந்த நேர்மை சீலர்கள் இந்திய ஜனநாயகம் ஒரு போலி என்பதை அம்பலப்படுத்தி அசுரன் உள்ளிட்ட தளங்களில் வந்துள்ள கட்டுரைகளின் ஏதேனும் ஒன்றே ஒன்றை மறுத்து வாதம் செய்தால் கூட இவர்களின் நேர்மை குறித்து நாம் பரிசீலிக்க ஏதுவாகும் அப்படி எதுவுமே செய்யாமல் ஆளும் வர்க்கத்தின் பிரச்சாரமாகிய இந்திய ஜனநாயகம் என்ற பொய்யை தமது வாதத்திற்கு அடிப்படையாக நம்பியிருப்பதே இந்த போலிகளை புரிந்து கொள்ள உதவும்.

//பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். //

தோழிலாளர்களை என்று லெனின் சும்மா பொத்தாம் பொதுவாக குறிப்பிடுவதாக சந்திப்பு போன்ற CPM பித்தலாட்டக்காரகள் நம்ப விரும்புகிறார்கள். இந்தியாவில் தொழிலாளர்கள் எத்தனை பேர் என்ற கணக்கையும் இவர்கள் கொடுத்துவிட்டால் ரொம்ப புன்னியமாகப் போகும். இந்திய ஒரு பின் தங்கிய விவசாய நாடு என்பதை சுத்தமாக மறைத்துவிட்டு அப்படியே ரஸ்யாவுடன் பொருத்தும் மொள்ளமாறித்தனமதான் சிறுபிள்ளைத்தனமதான் இங்கு வெளிப்படுகிறது.

மீண்டும் இங்கு ஒரு முதலாளித்துவ சமூகத்தின் இயல்புகளுக்கான நடைமுறைகளை இந்தியா போன்ற அரை நிலபிரபுத்துவ சமூகத்திற்க்கு பொருத்தும் பித்தலாட்டத்தை செய்கிறது இந்த் கும்பல்.

//ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.//

லெனின் குறிப்பிட்டுள்ளதோ மக்களை திரட்டி போராடுவதை மட்டுமே மாறாக ஆயுத போராட்டம் குறித்த பிரச்சாரத்தை நிராகரித்து அவர் எங்கும் எதுவும் கூறியதில்லை. ஆயினும் பித்தலாட்டாக்கார CPM கும்பல் லெனினை திரித்து புரட்டி தமது சந்தரப்ப்வாத கருத்துக்களை நியாயப்படுத்துகீறார்கள். இவர்களை குறித்து லெனின் என்ன சொல்கிறார் என்று கிழே பார்க்கலாம்:

"பலாத்கார புரட்சி பற்றிய திட்டவட்டமான இதே கருத்தோட்டத்தை முறையாய் வெகுஜனங்களின் மனதில் ஆழப் பதியச் செய்வது அவசியமென்பது மார்க்ஸ், ஏங்கெல்ஸின் போதனை அனைத்தின் ஆணி வேர் போன்றதாகும். இவர்களுடைய போதனைக்குத் தற்போது நடப்பிலுள்ள சமூக-தேசியவெறிப் போக்கும் காவுத்ஸ்கிவாதப் போக்கும் இழைத்துவரும் துரோகமானது, இந்த போக்குகள் இத்தகைய பிரச்சாரத்தையும் கிளர்ச்சியையும் கைவிட்டுவிட்டதில் மிகவும் எடுப்பாய் வெளிப்படுகிறது".-லெனின் (அரசும் புரட்சியும், அத்தியாயம் 1, 4. அரசு உலர்ந்து உதிர்வது...)"

லெனின் சொல்லாததை சொன்னதாக சொல்வது, லெனின் வார்த்தைகளை பிய்த்து போட்டு தவறான பொருளில் இயந்திரகதியில் வசதிப்படி பொருத்தி பொருள் காண்பது இவை இவர்களின் ரத்தத்தில் ஊறிய்து.

சரி உண்மையில் மக்களை புறக்கணிப்பது யார்? உலகமய அரசியலையும் சரி, மார்க்ஸிய அரசியலையும் சரி மக்களிடம் கொண்டு செல்லாமல் புறக்கணிப்பது யார்? மக்களின அடிமைத்தனத்தை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் வோட்டு பொறுக்கிகள் யார்? அது வேறு யாருமல்ல சந்திப்பு சார்ந்த CPM பாசிஸ்டு கட்சிதான் அது.

ம க இக நக்சில கும்பல் சாதித்ததில் ஒரு மசிரளவு கூட CPM சாதித்ததில்லை என்பது விந்தையான ஒரு உண்மை.

லெனின் புரட்சிகர புறநிலையிலலாதது பற்றி பேசுகிறாரே அன்றி புரட்சிகர் நடைமுறையை கைகழுவி சந்தர்ப்பவாத நடைமுறைக்கு போகச் சொல்லி எதுவும் சொல்லவில்லை ஆயினும் CPM பாசிஸ்டுகள் அப்படி லெனின் சொன்னதாக பின் குறிப்பாக தமது சொந்த நிலைப்பாட்டை சேர்த்துக் கொள்கிறார்கள்.

மீண்டும் ஜனநாயகமான விவாதச் சூழலும், மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் குறித்தே பேசுகீறார் லெனின். ஆயினும் இந்தியா ஒரு முதலாளித்துவ பாராளுமன்றம் இல்லை என்பதை நாம் எத்தனையோ முறைகள் ஆதாரப் பூர்வமாக பலரிடமும் விவாதம் செய்து நிறுவியுள்ளோம். காமரேடுகளோ அப்படி ஒரு நிருப்பிக்கப்பட்ட உண்மையின் கீழ் விவாதம் செய்ய அஞ்சி அது போன்ற் முயற்சிகள் எதிலும் ஈடுபடுவதில்லை. இதுதான் லெனின் குறிப்பிடும் சிறுபிள்ளைத்தனம்.

இதே CPM கும்பல் நேபாளத்தின் மன்னராட்சிக்கு உட்பட்ட போலி ஜனநாயக அரசையும் கூட முதலாளித்துவ பாராளுமன்றம் என்றே தூக்கி வைத்து ஆடினர். ஏனேனில் அங்கு அதனை எதிர்த்து உண்மையான ஜனாநாயக வழிப்பட்ட முதலாளித்துவ அரசை கொண்டு வர போராடிக் கொண்டிருந்தது நேபாள் மாவொயிஸ்டுகள் என்ற கும்பல்லல்லவா? அது CPM மாதிரியோ அல்லது நேபாள காங்கிரஸ் மாதிரியோ அல்லது நேபாள UML மாதிரியோ பெரிய கட்சியில்லையல்லவா?

வேண்டுமானால் இந்தியா ஒரு முதலாளித்துவ ஜனநாயகம் என்று நிரூபிக்கட்டும் காமரேடுகள். பிறகு உள்ளதெல்லாம் சரி காமெடியாக CPM பித்தலாட்டங்கள்.

முதலாளித்துவ பாராளுமன்றம் என்று சொல்லும் CPM நபர் கட்டுரையின் கடைசி பகுதியில் இப்படி குறிப்பிடுகிறார்:

//பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து //

அதென்ன பெரு முதலாளிகள்? இது வெறுமே அளவை மட்டுமே குறிக்கிறது இவர்களின் கணக்கில் அப்படியென்றால் இதே பெரு முதலாளிதான் அமெரிக்காவிலும் ஆட்சி செய்கிறான்.

BJP என்ன பெரு முதலாளி கட்சியா?

அதெப்படி நிலபிரபுத்துவ சமூகத்தை முதலாளித்துவம் பேணி பாதுகாக்கும் விந்தை? ஒரு வேளை மார்க்ஸியமே தவறோ?

//மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது.//

மக்கள் ஜனநாயக புரட்சி என்றால் என்னவென்பது ஒரு தனி கேலி கூத்து குறைந்தது அந்த செயல் தந்திரத்தில் காமரேடுகள் முன்னேறியுள்ளனரா என்றால் அதுவும் இல்லை., கட்சி திட்டத்தை மட்டும் ரீ பிரிண்டு போட்டுக் கொண்டு நடைமுறையில் மக்கள் ஜனநாயக புரட்சி என்பதற்க்கு எதிர்திசையில் சென்று கொண்டுள்ளனர் சுய முரன்பாட்டு முத்தண்ணாக்கள். இவர்களின் தற்போதைய கூட்டாளிகள் யார் என்று பார்த்தால் இது தெரிய வரும்:

#1) இந்தோனேசிய சலிம் கும்பல், டாடா, அம்பானி.
#2) அமெரிக்க அதிகார வர்க்கம், அரசியல் தலைமைகள்
#3) சங்கராச்சாரி, பில்லி சூனிய கும்பல்
#4) பார்ப்ப்னியமே எமக்கு முதல் என்ற வெளிப்படையாக அறிவித்து விட்டே அமைச்சராக தொடர்வது.

நல்ல நடைமுறை தந்திரம்.

//மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு//

இந்த அம்சத்தில் முற்றிலும் அம்பலப்பட்டு போய் இன்று கம்யுனிஸத்திற்கு கரும்புள்ளீ குத்தும் நடைமுறை தந்திரமாக் இருப்பது CPM னுடையதுதான்.

//இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! //

கடைசியில் மிஞ்சியது இதுதான். இந்த வரையறைப்படி சோனியா காந்தி கூட நல்ல கம்யுனிஸ்டுதான்.

CPMன் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் ஊழல்களுக்கு, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் வசூல் வேட்டைகளுக்கு ஆதாரங்களை அளவிட முடியாத அளவு இருப்பினும் இவையெதையும் சட்டை செய்யாம வாய் சவாடால் அடிக்கிறார் இந்த CPM நபர். ஜெயலலிதா உள்ளிட்டவர்களின் தந்திரம்தான் இது. நாம் ஆதாரங்களை வைத்தால் கள்ள மௌனம் சாதித்து ஓடிவிடுவதும் இதற்க்கு முன்பும் நடந்துள்ளது.

தொழிலாளி வர்க்கம் என்று தனது வாதத்தை நடைமுறையை சுருக்கிக் கொள்ளும் CPM இந்தியாவில் பெரும்பான்மை வர்க்கம் எது என்ற ரகசியத்தை கொஞ்சம் சொன்னால் சிறப்பாக இருக்கும்.

அசுரன்Related Articles:

"பாஸிஸ்டு CPMமும், லெனின் சொல்லும் ஜனநாயக புரட்சியும்!!!!"==> http://poar-parai.blogspot.com/2008/02/cpm.html

மானங்கெட்ட சிபிஎம்மும், விடுதலையின் விடிவெள்ளி பகத...

சி.பி.எம். - இன் மதச்சார்பின்மை : நரியின் சாயம் வெளுத்ததுhttp://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_11.html

போதையில் நடந்த மாநாடு :மார்க்சிஸ்டுகளின் கலாச்சாரப் புரட்சிhttp://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/march/PJ_2008_3_08.html

காவிமயமாகும் சி.பி.எம்.http://tamilcircle.net/unicode/puthiyajananayagam/2008/feb/PJ_2008_2_03.html

ஜனநாயகம் என்றால் என்ன?http://tamilcircle.net/unicode/general_unicode/104_general_unicode.html


குறிப்பு: மேற்கண்ட விளக்கங்களை எனது முந்தைய பதிவில் (http://yekalaivan.blogspot.com/2008/04/blog-post_20.html) தோழர் அசுரன் பதிந்திருந்த பின்னூட்டத்தை இங்கே மீள்பதிவாக வெளியிட்டுள்ளேன். நிச்சயமாக சந்திப்பு நமது தளங்களில் வந்து விவாதிக்க மாட்டார். ஆனால் அவருடைய சக சி.பி.எம். தோழர்கள், தோழர். ஜெயக்குமார் போன்றவர்களுக்காகவே இதனை இங்கு மீள்பதிவிட்டுள்ளேன். அவர்களாவது விவாதத்தைத் தொடருவார்களா?! பொறுத்திருந்தே பார்ப்போம்....... 

தோழமையுடன்,
ஏகலைவன்.

Saturday, January 17, 2009

டாட்டாவும் ஆர்.எஸ்.எஸ்.ம் பங்காளிகள்! எதிர்த்துக் கேட்கும் புரட்சியாளர்கள் ஜென்ம விரோதிகள்!! - சிபிஎம் கட்சியின் ’குண்டர் கொள்கை’...

அன்பார்ந்த தோழர்களே,

டாட்டாவுக்கு ஆதரவாக மேற்குவங்க மக்களை வஞ்சிக்கத் துணிந்த போலிகள், சலீமுக்கு ஆதரவாக நந்திகிராம மக்களை நரவேட்டையாடிய போலிகள் தமது தலைமை அலுவலகமான டில்லி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்கிய பாஜக-ஆர்.எஸ்.எஸ் ரவுடிகளை எப்படி சந்திக்கிறார்கள் என்று பார்த்தாலே புரியும் இவர்களது அரசியல் எப்படிப்பட்டது என்று.

கீழ்கண்ட பதிவினைத் தோழர் அசுரன் அவர்களது வலைப்பதிவிலிருந்து இங்கு வெளியிடுகிறேன்.

- கலைவேந்தன்.

------------------------------------------------------------------------------------


ஜனநாயகம் என்பது RSS போன்ற இந்துத்துவ பயங்கரவாதிகளுக்கு மட்டுமே உரியது - கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !!!

டந்த மாதம் போரூரில் RSS கும்பலிடம் அடிவாங்கியது CPMன் தமுஎச. அடிவாங்கிய கையோடு அதை எதிர்க்கிறேன் பேர்வழி என்று சொல்லி போய் இன்னொரு முறை அடிவாங்கி வந்தார்கள். இதற்கு முன்பு டெல்லியில் CPM அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள் RSS கும்பல். இன்னும் பல இடங்களில் அடிவாங்கியிருக்கிறார்கள் CPM. ஆயினும் இந்த சம்பவங்களில் எல்லாம் CPM தனது பின்புறத்தையும், முன்புறத்தையும் மூடிக் கொண்டு சொறிநாயைப் போலவே வந்துள்ளது. கேட்டால் ஜனநாயகம் என்று ஒரு பதில் சொல்வார்கள். இவர்களின் சகலப்பாடி CPIயாவது RSS கும்பலின் சஹாவை எதிர்க்க ஜனநாயக முறையிலாவது போராடி அடிவாங்கியது. அந்த நடவடிக்கைகளையும் CPM செய்வதில்லை. நல்லது, இதே ஜனநாயக அனுகுமுறையைத்தான் அல்லது சரியாக சொன்னால் சொறிநாய்த்தனத்தைத்தான் எல்லாரிடமும் மேற்கொள்கிறார்களா CPM பாசிஸ்டுகள்? இல்லை நண்பர்களே.

சில நாட்களுக்கு முன்பு முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு குறித்து பல்லாவரத்தில் பிரச்சாரம் செய்யப் போன ம.க.இ.கவின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்களை CPM தோழர்கள் உருட்டுக் கட்டை ஜனநாயகத்தால் தாக்கியுள்ளனர். பதிலுக்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்கள் என்பதும், அது CPM ஏரியா என்பதும், அங்கு சமீபத்தில் CPMலிருந்து பிரிந்து வந்து புஜதோமுவில் இணைந்த கடுப்பு அவர்களுக்கு உள்ளது என்பதும் கிளை செய்திகள். இதே போலத்தான் காரப்பட்டில் ம.க.இ.க மீது தாக்குதல் நடத்தி தேமுதிக நண்பர் ஒருவரை கொன்றனர் CPM காலிகள்.

புரட்சிகர அமைப்பினர் மட்டுமல்ல, சிங்கூர், நந்திகிராம், தற்போது மேற்கு வங்கபழங்குடியினர், கேரள பழங்குடியினர், பிற புரட்சிகர-ஜனநாயக அமைப்பினரை CPMஅனுகும் விதம் இப்படிப்பட்டதுதான். நமது கேள்வி ஒன்றுதான் RSSயின் அத்வானி என்ற பயங்கரவாதியை நண்பர் என்று புத்ததேவு அன்புடன் கூப்பிடுவதும், அவர்களுடன் பொது மேடைகளில் கூடிக் குலாவுவதும், RSSக்கு மட்டுமே ஜனநாயகம் என்று சொல்லுவதுமான ஒரு கட்சியை இந்துத்துவ அமைப்பின் தொங்கு சதை என்று அழைப்பதா அல்லது வேறு ஏதேனும் பெயரிட்டு அழைப்பதா?

RSSக்கும் இவர்களுக்குமான முரன்பாடு என்பது வோட்டு பொறுக்குவதில் மட்டும்தான். இன்னும் சரியாகச் சொன்னால் புரட்சிகர அமைப்புகளை கண்டுதான் CPM உண்மையில் பீதியடைந்துள்ளனர். நல்லது, உங்களது பய பீதி எங்களுக்கு புரிகிறது. உங்களுக்குள்ளேயே நீங்கள் நொறுங்க தொடங்கிவிட்டீர்கள். இனி அதை வீரியப்படுத்துவது மட்டுமே புரட்சிகர அமைப்புகளின் வேலை.

CPM கட்சியை அவர்களுக்கு புரிந்த மொழியிலேயே அனுகுவது ஒன்றும் பெரிய விசயமல்ல. இன்னும் சரியாகச் சொன்னால் தமிழகத்தின் பெரிய கட்சிகளே கூட ம.க.இ.க. விசயத்தில் எச்சரிக்கையாகவே நடந்து கொள்வர். ஏனேனில் ம.க.இ.க.வின் எதிர்வினை அப்படிப்பட்டதாக இருக்கு. அந்தவகையில் CPMயை சமீபத்திய தாக்குதல்களில் புரட்சிகர அமைப்புகள் அனுகவில்லை. CPM விசயத்தில் உடனடி எதிர்வினை என்பது அவர்கள் தனிமைப்பட ஏதுவானதாக இருப்பதுதான் நல்லது. அதற்கு பின்பு அவர்களை அடித்தால் அது தர்ம அடி என்பதைவிட சாவு மணி என்பதாகவே இருக்கும். கூடிய விரைவில் சாவு மணியை 'சந்திக்க'இருக்கும் சந்திப்பு போன்ற CPM அல்லக்கைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வினவுவில் வந்த கட்டுரையை இங்கு மறுபிரசூரம் செய்கிறேன்.

சொரனையுள்ள CPM உள்ளங்களை விவாதத்திற்கோ அல்லது CPMயை விட்டு வெளியே வரவோ அழைக்கிறேன்.

பய பீதி வரும் முன்னே!! CPMக்கு சாவுமணி வரும் பின்னே!!!

அசுரன்

நன்றி வினவு

____________________________________________________________


காரப்பட்டில் எமது தோழர்களின் குருதியைச் சுவைத்த சிபிஎம் குண்டர்களின் கோரப்பற்களில் ஒட்டிய உதிரம் உலர்வதற்குள், சென்னை பல்லாவரத்தில், அக்கம்யூனிஸ்டுக் கட்சியின் காலிகள் தமது வெறியாட்டத்தை மீண்டும் அரங்கேற்றியுள்ளனர். போலி கம்யூனிஸ்டுகளான சிபிஎம் கட்சியினர் மாநிலத்திற்கு ஒரு வேசம் போடுவதாக பிற அரசியல் கட்சிகள் அவர்களை குற்றம் சாட்டுவது வழக்கம். ஆனால் எல்லா மாநிலங்களிலும் அவர்களிடம் காணப்படும் ஒரே ஒற்றுமையான அம்சம், பொறுக்கித்தனம். வங்கத்தின் நந்திகிராம் முதல் தமிழகத்தின் காரப்பட்டு வரை தமது கொலை வெறியாட்டத்தை நடத்தி, தமக்கும் ஆர்.எஸ்.எஸ்-க்கும் கொடியின் நிறத்தில் மட்டுமே வேறுபாடு என்பதை நாள்தோறும் நிரூபித்து வருகின்றனர்

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இதுகாறும் காணாத வகையில், ‘தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம்’ எனும் தாரக மந்திரத்தோடு, மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் சகல ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளாலும், கட்சி வேறுபாடின்றி அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதார கொள்கை, நமது நாட்டின் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களது வாழ்க்கையை அழித்து, அவர்களை வீதிகளில் சக்கைகளாக வீசியிருக்கிறது. குறிப்பாக நமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் ஈவிரக்கமற்றது. நூற்றுக்கணக்கான அரசுடைமை ஆலைகள், தொழில் நிறுவனகங்கள் இழுத்து மூடப்பட்டன. அறுபதாண்டுகளாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை, அரசு காலில் போட்டு மிதித்து நசுக்குகிறது. அனைத்து உரிமைகளையும் பறிகொடுத்து வரும் தொழிலாளர்கள் கிளர்ந்து போராடினால்,ஹூண்டாய் தொழிலாளர்கள் மீதான தாக்குதல்களைப் போல கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி ஒடுக்கி வருகிறது. மறுபுறமோ சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், நிலக் கையகப்படுத்தல்கள், தொழிற்சங்கச் சட்டங்களை திருத்துதல், வரிச் சலுகைகள் என முதலாளிகளின் தாள் பணிந்து, குறிப்பறிந்து வேசித்தனம் புரிகிறது.

எனவே, நமது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இம்முதலாளித்துவ பயங்கரவாதத்தை எதிர்த்து தொழிலாளி வர்க்கத்தையும், பரந்துபட்ட உழைக்கும் மக்களையும் அணிதிரட்டும் நோக்கத்தோடு, எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்ணணி (பு.ஜ.தொ.மு), வரும் ஜனவரி 25ஆம் தேதியன்று சென்னை அம்பத்தூரில் ’முதலாளித்து பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு’ என்ற தலைப்பில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டு, மக்களிடையே முழுவீச்சாகப் பிரச்சாரம் செய்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை(22-12-08) அன்று, இப்பிரச்சாரத்தையொட்டி தோழர் ஜெயராமன், தோழர் வெற்றிவேல் செழியன் முதலான ஆறு பு.ஜ.தொ.மு தோழர்கள் சென்னை பல்லாவரம் பகுதியில் பிரச்சாரம், நிதிவசூலுக்காக சென்றனர். கொடிகளோடு செஞ்சட்டையணிந்த நமது தோழர்கள் அப்பகுதிக்கு சென்றதுமே அவர்களை எதிர்கொண்ட அப்பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட சி.பி.எம், DYFI கும்பல், தோழர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர். சிறிது நேரத்தில் தோழர்கள் மக்களிடையே பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, தோழர்களுடைய சைக்கிளை எட்டி உதைத்து, தகராறில் ஈடுபட்டுள்ளனர். ‘கண்ணியமான’ ஜோதிபாசு, சுர்ஜீத், காரத் வழி வந்த அக்குலக்கொழுந்துகள் கேட்போர் கூசக் கூடிய கெட்ட வார்த்தைகளால் தமது அர்ச்சனையை துவங்கியுள்ளனர்.

“மரியாதையாக பேசுங்கள் தோழர்” என்று சொன்ன தோழர் ஜெயராமனை, “என்னடா தோழர்ரு, பூலுன்னுகிட்டு” (என்ன ஒரு பாட்டாளி வர்க்க பண்பாடு!) என்றவாறு கும்பலாக தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற தோழர் வெற்றி வேல் செழியனை ஒருவன் மிகக் கடுமையாக நெஞ்சில் தாக்கியுள்ளான். உருட்டுக் கட்டை கொண்டு ஒருவன் தாக்கியதில், தோழர் ஜெயராமனின் தோள்பட்டை இறங்கியுள்ளது. பொறுத்துக் கொண்டிருந்த இளம் பு.ஜ.தொ.மு. தோழரொருவர் உருட்டுக் கட்டையை பிடுங்கி திருப்பித் தாக்கியுள்ளார்.காயம்பட்ட நிலையிலும் அவரை தடுத்த தோழர் ஜெயராமன், “இவர்கள் வேண்டுமென்றே பிரச்சினை செய்கிறார்கள். திருப்பித் தாக்கினால் பிரச்சினை திசை திரும்பி விடும். வேண்டாம்” எனக் கூற, அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர். உடனடியாக, நேரே பல்லாவரம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கே தோழர்கள் செல்வதற்கு முன்னரே, பல்லாவரம் பகுதி் சி.பி.எம் செயலாளர் ஜீவா என்பவர் தலைமையில் திரண்டு வந்த காலிக் கும்பல், நக்சலைட்டுகள் தங்களை தாக்கி விட்டதாகப் பொய்ப் புகார் கொடுத்தது. அந்த ஜீவாவிற்கும், இந்த ஜீவாவிற்கும் ஒரு வித்தியாசம்தான். அவர் கம்ப ரசம் குடிப்பார். இவர் எல்லா ரசமும் குடிப்பார். குடித்த கையோடு புரட்சியாளர்களை தேடிப் பிடித்து அடிப்பார். எல்லாம் மக்கள் ஜனநாயகப் புரட்சி நலனுக்காகவே! சப் - இன்ஸ்பெக்டர் பஞ்சாட்சரம் எனும் சி.பி.எம் கைத்தடி அவர்களுக்கு ஒத்தூத, நீண்ட நேரம் வாதங்கள் நடந்துள்ளன. “திருட்டு வசூல் பண்ணி ஏண்டா எங்கத் தாலியறுக்கிறீங்க” என ஒரு பெண் எஸ்.ஐ சலித்துக் கொள்ள, “யார் திருட்டு வசூல் பண்றது, சிக்னலுக்கு சிக்னல் வசூல் பண்ணி பொழப்பு நடத்துறவங்க யாருன்னு ஊருக்கே தெரியும். நாங்கள் நக்சல்பாரிகள். உழைக்கும் மக்களின் நலனுக்காக, அவர்களது கோரிக்கைகளுக்காக, வெளிப்படையாக நிதிவசூல் செய்கிறோம்.” என காவல் நிலையத்தில் வைத்தே செருப்பாலடித்தது போல் பதில் கூறியுள்ளார் நமது தோழர். காலை 8 மணிக்கு தாக்கப்பட்ட தோழர்கள், மதியம் 1 மணி வரை அடிபட்ட நிலையிலேயே, போலிசின் கைக்கூலித்தனத்தை எதிர்த்து வாதிட்டுள்ளனர். பின்னரும் கூட தாக்கியவர்களை கண்டுபிடிப்பது சிரமம் எனக் கூறி, முதல் தகவல் அறிக்கை பதிய மறுத்து விட்டார் கைத்தடி பஞ்சாட்சரம்.

அடிபட்டால் ஓடி விடுவார்கள் எனத் தப்புக் கணக்குப் போட்ட சி.பி.எம், நிலைமை முற்றுவதை உணர்ந்து சமாதானமாகப் போய் விடலாம் எனக் கூறியுள்ளனர். அதனை ஏற்க மறுத்த தோழர்கள், குற்றத்தை பதிவு செய்யாமல் ஓய மாட்டோம், கட்டப் பஞ்சாயத்து செய்யும் போலிசை அம்பலப்படுத்தாமல் விட மாட்டோம் என தீர்மானகரமாக தெரிவித்துள்ளனர். அடுத்த நாளே சென்னை முழுதும் கண்டனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு விட்டன. மேலும் கண்டன ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. போலீசின் கைக்கூலித்தனத்தை தோலுரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்படவுள்ளது.

குரோம்பேட்டையில் போலி கம்யூனிஸ்டுத் தொழிற்சங்கத்தைப் புறக்கணித்து, பு.ஜ.தொமுவில் உணர்வுள்ள சி.பி.எம் அணிகள் இணைந்ததனால் ஏற்பட்ட எரிச்சலின் விளைவாகவே இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது என அறிய வருகிறோம். “எங்க ஏரியா உள்ள வராதே!” என வெறியாட்டம் போடும் பல்லாவரம் குத்தகையாளர்களுக்கு ஒன்றைக் கூறிக் கொள்கிறோம். நந்திகிராமில் ‘வெளியாட்கள்‘‘ (OUTSIDERS) நடமாட்டத்தை தடுக்க, துப்பாக்கிச் சூடுகளும், குண்டுவெடிப்புகளும், கற்பழிப்புகளும். நடத்தி ஏரியாக்களை கைப்பற்றிய காலித்தனம் இங்கே எடுபடாது. உழைக்கும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் உள்ள நாங்கள் உங்களைப் புழுக்களைப் போல ஒதுக்கி விட்டு, எங்கள் வேலையை செய்து கொண்டிருக்கிறோம். வழி மறித்து வம்பிழுப்பதே உங்கள் வேலையாக வைத்துக் கொள்வீர்களேயானால், காலால் மிதித்து நசுக்கி விட்டு கடந்து செல்ல கிஞ்சித்தும் தயங்க மாட்டோம். வார்த்தைச் சவடால்களில் எமக்கு நம்பிக்கையில்லை.உங்களை எரிச்சலில் தள்ளும், நீங்கள் புரியாதது போல் நடிக்கும் எமது சமரசமற்ற புரட்சிகர அரசியலோடும், உங்களுக்கு புரியக் கூடிய பொருட்களோடும் களத்தில் சந்திப்போம்.

பின்குறிப்பு:

புரட்சிகரப் பொழுதுபோக்கிற்காக அமைப்பு நடத்தும் சிபிஎம்மின் கலை இலக்கிய கதம்பம் தமுஎச, அதே நாளின் இரவில் சென்னை கோடம்பாக்கத்தில் தனது சினிமா மோகத்தை அடிப்படையாக வைத்து கலை இரவொன்றை நடத்தியுள்ளது. புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் இதழ்களை விற்பனை செய்வதற்காக ஒரே ஒரு பு.ஜ.தொ.மு தோழர் சாலையில் கடை பரப்பி வைத்துள்ளார். இரவு 12 மணிக்கு அங்கே வந்த பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 10 ‘குடிமகன்கள்’ - DYFI, சி.பி.எம் குண்டர்கள், போதைத் தலைக்கேற, பொதுமக்கள் முன்னிலையிலேயே கெட்ட வார்த்தைகளால் ஏசி, கடையை எடுக்கச் சொல்லி, காலித்தனம் செய்துள்ளனர். தள்ளுமுள்ளை தடுக்க வந்த SFI தோழர்கள், “இவர்களை ஏன் எடுக்கச் சொல்கிறீர்கள்? இவர்கள் பத்திரிக்கைகள் நல்ல பத்திரிக்கைகளாகத்தானே தெரிகின்றன” என்றதற்கு, “இல்லை, இல்லை, இவர்கல் நக்சலைட்டுகள், நமது எதிரிகள்” என ஆவேசக் கூச்சல் போட்டுள்ளன சிபிஎம்மின் குடிமகன்கள். பின்னர் தோழர் பத்திரிக்கைகளை எடுத்தும் கூட ஆத்திரம் அடங்காத கும்பல், தோழர் கையிலிருந்த விலைவாசி உயர்வுக்கு எதிரான 300 துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி, அங்கேயே தீக்கிரையாக்கியுள்ளது. சாராயம் குடித்து விட்டு சலம்பும் ‘தோழர்களுக்கு’ உழைக்கும் மக்களின் வியர்வையிலிருந்து பெறப்பட்ட நிதியில் தயாரிக்கப்பட்ட பிரசுரங்களின் வாசனை தெரியும் என நம்புவது மடமை. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த, கூடியிருந்த சிபிஎம் அணிகளும், SFI மாணவர்களும் நமது தோழரிடம் பின்னர் தமது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எதிர்வினையில்லாத வருத்தம் குற்றத்திற்கு ஒப்பாகும் என்பதை நேர்மையான சிபிஎம் அணிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

இம்மாதம் போயஸ் தோட்டத்தில் அம்மாவை சந்தித்து பொக்கே கொடுத்து கூட்டணிக்கு அச்சாரம் போட்டுள்ளது மார்க்சிஸ்ட் கட்சி. புரட்சித் தலைவியின் பொற்பாதங்களில் பணிந்து தோழர்கள் மக்கள் ஜனநாயகப் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். எல்லாம் காங்கிரசு, பா.ஜ.கவை எதிர்ப்பதற்கான தேர்தல் உத்திகளாம். மதமாற்ற தடைச்சட்டம், ஆடு கோழி பலியிடத் தடை சட்டம், சேதுசமுத்திர திட்டத்திற்கு ராமர் பாலம் என்ற புராணப் புரட்டின் மூலம் எதிர்ப்பு என்று இந்துத்வ வாதிகளை விட அதிக வேகத்தில் செல்லும் அம்மா மதசார்பற்ற சக்தியாம். மேலும் தேர்தல் முடிந்து அம்மா பா.ஜ.க பக்கம் சாயலாம் என்பதையும் “தோழர்கள்” உணர்ந்திருக்கிறார்களாம். அதேபோல தேர்தலுக்கு பின் சி.பி.எம் கட்சி மதவாத சக்திகளை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதற்காக காங்கிரசுக்கு ஆதரவு தருவதையும் தோழர்கள் மறுக்கவில்லை. இடையில் தமிழ்நாட்டில் இரண்டு சீட்டுக்கள் வேண்டும் என்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சி கொடுக்கும் அரசியல் விளக்கத்தைப் பார்த்தால் சந்தர்ப்பவாதத்தின் இலக்கணத்தை புரிந்து கொள்ளலாம். போயஸ் தோட்டத்தின் ஆசியில் போலிக் கம்யூனிஸ்டுகள் புரட்சியை முடிப்பதற்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். தலைமையே இப்படி பிழைப்பு வாதத்தில் புரளும் போது அணிகள் ரவுடித்தனம் செய்வதில் என்ன வியப்பு? இல்லையென்று மறுக்கும் நேர்மை உள்ள சி.பி.எம் அணிகள் கட்சியை விட்டு வெளியேறுங்கள், புரட்சிகர அமைப்புக்களில் அணிதிரளுங்கள், இல்லையேல் வரலாற்றில் போலிக்கம்யூனிஸ்டுகள் என்ற பட்டத்தோடு நீங்கள் இடம் பெறவேண்டியிருக்கும்.




Related Articles: